29/8/2015 – தந்தையின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்

1. தந்தைக்கு உபதேசித்த முருக கடவுளை போல, நானும் என் தந்தைக்கு பிறவா வரம் வாங்கி தந்திருக்கின்றேன்! எல்லாம் வல்ல என் குரு லிங்கத்தின் அருளாலே!!
இதில் எனது பங்கு என்று எதுவும் இல்லை எல்லாம் என் ஐயன் இட்ட அருள் பிச்சை!!

2. என் ஐயன் இட்ட தீ மூலாதாரத்தில் எழும்பி ஆறாதாரத்திலும் கொழுந்து விட்டு எரியுதடி என் அருள் தாயே!

3. மூலக் கனலில் மூழ்கி கிடந்த நான் இப்போது அருள் ஜோதியில் அகமகிழ்ந்து நிற்கின்றேனே!

4. என்னை எனக்கு தெரியாத்திருந்த போது எனது என்ற எக்காளத்தில் இருந்தேன்.

என்னை எனக்கு தெரிந்த பின் எல்லாம் என் ஈசன் என்று தெளிவு பெற்று என்னுள் ஆழ்ந்திருந்தேனே!!